Posts

நாகரீகம் என்பது நன்னடத்தையில் ..

நாகரீகம் என்பது நன்னடத்தையில் .. அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!

உயிர் பிரியும் நேரத்திலும்...

உயிர் பிரியும் நேரத்திலும்... சர் பிலிப் சிட்னி என்பவர் ஆங்கில அரசின் தளபதி சிறந்த கவிஞரான இவர் நல்லவர். சேவையில் ஆர்வமுள்ளவர். ஒர் முக்கியமான போர் ஒன்றில் சிட்னி கலந்து கொள்ள நேரிட்டது. வீரர்கள் பலரும் குண்டடிபட்டு இறந்தனர் சிட்னியும் பலத்த அடிபட்டதால் இறக்கும் நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு மிகவும் தாகமெடுத்தது தண்ணீர் தண்ணீர் என தீனமான குரலில் வேண்டினார். ஒருவர் அவசரமாக அவருக்கு தண்ணீர் கொண்டு வந்தார் அதை வாங்கிக் குடிக்கப்போகும் போது அருகில் மற்றொரு வீரன் தீனக் குரலில் நீர் வேண்டியது சிட்னிக்குக் கேட்டது. உடனே சிட்னி சிறிதும் தயக்கமின்றி அவரிடம் உன் தேவை என் தேவையைவிட முக்கியமானது என்று கூறி நீரை அந்த வீரனுக்கு வழங்கினார். இதனால் அந்த வீரன் உயிர் பெற்றான் ஆனால் நீரைத்தானமாக வழங்கியவர் அமரரானார். உயிர் பிரியும் நேரத்திலும் ஓர் உயிரைக் காத்த நற்காரியம் செய்ததற்கு என்ன காரணமாக இருந்திருக்க முடியும் ? அவரிடம் மிளிர்த்த அன்பு தான் காரணம் அதுவரை சாதாரணப் புகழில் இருந்த சிட்னி இதன் பின் நிலைத்த புகழ் பெற்றார் அரசு சிட்னிக்கு சர்பட்டம் வழங்கி கௌரவித்தது.

சந்நியாசி கீதம் உருவான கதை!

சந்நியாசி கீதம் உருவான கதை! அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார். அன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம்...

கொம்பில் அமர்ந்த கொசு!

கொம்பில் அமர்ந்த கொசு! ஒரு கொசு பறந்து வந்தது. ஒரு காளை மாட்டின் கொம்பு மீது அதுபோய் உட்கார்ந்தது.நீண்ட நேரம் அப்படியே இருந்தது. அதன் மனத்திற்குள் ஓர் உறுத்தல் நாம் வெகு நேராமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறோமே... மாட்டுக்கு வலிக்காதா ? அது தாங்குமா? என்ன காளையாரே இங்கே நான் ரொம்ப நேரமாக உட்கார்ந்திருக்கிறேன் உங்களுக்குச் சிரமமாயிருக்கும் அதனாலே இதோ நான் புறப்பட்டு விட்டேன்! இதைக் கேட்டதும் காளைக்குச் சிரிப்பு வந்தது. கொசுவே நீ போக வேண்டியதில்லை... வேண்டுமானால் போய் உன் குடும்பத்தையே கூட அழைத்துக் கொண்டு வா... எல்லோருமாக சேர்ந்து என் கொம்பிலே உட்கார்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி எனக்கென்ன கவலை ? என்றது காளை சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் அந்த காளையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அது எதையும்தேடிச்செல்லவில்லை அது எதையும் விலக்கவுமில்லை வருவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. எதனாலும் பாதிக்கப்படவில்லை பொறுத்துக் கொள்வது மட்டுமல்ல பற்றற்று இருப்பதும் முக்கியம் நமக்கு தேவை அதுதான்.

கோழியால் வந்த குழப்பம்!

கோழியால் வந்த குழப்பம்! ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்.... இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல....அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும். நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல....அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்...அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள் முல்லா...

நில் எதிர்த்து நில்!

நில் எதிர்த்து நில்! காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒரு நாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து விட்டு. ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ஒரு பக்கம் பெரிய குளம் மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர் . அந்தப் பாதை வழியாக அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு குரங்குக் கூட்டம் அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைப்பட்டது அவர் முன்னேறத்தயங்கினார். அவர் பின்வாங்குவதைக் கண்டதும் குரங்குகள் அவரை நோக்கி முன்னேறின சுவாமி ஜி திரும்பி ஓடத்தொடங்கினார். குரங்குகள் விடாமல் துரத்தின. அவரது வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவையும் விரைந்து முன்னேறி அவர் மீது விழுந்து கடிக்கத் தொடங்கின. இனி சமாளிக்க முடியாது என்று தளரும் நிலைக்கு வந்து விட்டார். அப்போது வயதான துறவி ஒருவரின் குரல் கேட்டது. நில் எதிர்த்து நில். மிருகங்களை எதிர்கொள் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுவாமிஜியிடம் ஒரு புத்துணர்ச்சி பரவியது. ஓடிக்கொண்டிருந்தவர் நின்றார் உறுதியாக நின்று குரங்குகளை வெறித்துப் பார்த்தார். அவ்வளவுதான் அவை பின் வாங்கத் தொடங்கின. சுவாமிஜி முன்னேறத் தொடங்கியதும் அவை த...

இறுதி மூச்சு வரை உன் பணியே!

இறுதி மூச்சு வரை உன் பணியே! ராம லக்ஷ்மணர்கள் சுக்ரீவன் உள்ளிட்ட வானரசேனை, அத்துடன் பராக்கிரம அனுமன் இத்தனை பேரும் ஒன்று கூடி ராவணேஸ்வரன் பிடியிலுள்ள சீதையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். சுக்ரீவன் வானரங்களை திசைக்கொருவராய்ச் செல்ல உத்தரவிட்டான் பின் அனுமனைப் பார்த்து. பலம், புத்தி நன்னெறி, இடத்திற்கும் காலத்திற்கும் உகந்த வண்ணம் நடத்தல் ஆகிய எல்லா குணங்களும் கொண்டவரே சீதையை மீட்கும் வழியைச் சொல்லுங்கள் என்றான். சுக்ரீவனின் வார்த்தைகளும் அனுமனின் தோற்றமும் ஸ்ரீராமபிரானுக்கு , இவரே தம் காரியத்தை முடிக்க வல்லவர் என்ற எண்ணத்தைத் தந்தது. உடனே தனது மோதிரத்தை ஓர் அடையாளமாக ராமன் அனுமனிடம் அளித்தார். தன் பிரபுவின் எண்ணப்படியே சீதையைக் கண்டு. நல்ல சேதியுடன் ராமனிடம் வந்து அவரது விஸ்வாசமான வேலைக்காரனாக அனுமன் ஆனான். எஜமானன் அளிக்கும் வேலையை ஒருவன் சிரத்தையாகச் செய்யும் அளவிற்கு உண்மையான வேலைக்காரனாக ஆகலாம் இறைவனுடைய பணிகளில் நம்மை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு அதற்கென்றே நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு செய்யச் செய்ய, நமது மூச்சும் பேச்சும் அவனது வேலைகளைப் பற்றியதாகவே இருக்கும் இதன் ப...